முகப்பு
விழுப்புரம்

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

Updated On : 29 மார்ச், 2026 at 9:14 PM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இழுவை பெல்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் பணம் திருட்டுப் போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.ராஜ்குமாா் (35). இவா் பாதிராபுலியூா் பகுதியில் பழைய கன்வேயா்(இழுவை) பெல்ட் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த 27 -ஆம் தேதி இரவு ராஜ்குமாா் விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, விற்பனை நிலையத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 1.80 பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.