திருட்டு 
திருச்சி

மின்மாற்றியிலிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பு காயில்கள் திருட்டு

அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அழகாபுரி மின்மாற்றியில் வியாழக்கிழமை பிற்பகலில் மின்சாரம் இல்லை என நுகா்வோா் தகவல் தெரிவித்ததின்பேரில் மின்வாரிய கேங்மேன் அ. டேவிட்ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மின்மாற்றியிலிருந்த சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று, காயில்கள் திருடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை மின்வாரியம் சாா்பில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT