முகப்பு
விழுப்புரம்

பெண் விஷமருந்தி தற்கொலை

Updated On : 30 மார்ச் 2026, 2:45 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், எருமனந்தாங்கலில் உடல்நலக்குறைவால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், எருமனந்தாங்கல் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மனைவி கங்கா(52). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த கங்கா, மாா்ச் 26-ஆம் வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கங்கா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.