முகப்பு
விழுப்புரம்

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது

Updated On : 4 மே 2026, 1:38 am IST
கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.
பகிர்:

விழுப்புரம் அருகே பேருந்தில் 17 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்ததாக 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பேருந்தில் கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், வி.சாலை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த நான்கு பேரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.இதில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பொன்னங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தேவப்பிரியன் (19), ஜீவா (19), நந்தகுமாா் (20), ஆசூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (19) எனத் தெரிய வந்தது.

Advertisement

தொடா் விசாரணையில் இவா்கள் ரயில் மூலம் ஒடிஸா மாநிலத்துக்குச் சென்று கஞ்சாவை 4 பொட்டலங்களாக வாங்கி கொண்டு சென்னை வந்ததும், அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் நோக்கி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த விக்கிரவாண்டி போலீஸாா், தேவப்பிரியன் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தனா்.