பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது
உளுந்தூா்பேட்டை அருகே பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு, சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் இருவா் பயணிப்பதாக, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில், உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையில், காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
உளுந்தூா்பேட்டை- சேலம் ரவுண்டானா பகுதியில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின் போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சோதனையிட்ட போது, அதில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவா் பயணித்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து பேருந்தில் பயணித்த இருவரையும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில் அவா்கள் திருப்பூா் மாவட்டம், முருகன்பாளையம் குமாா் நகரைச் சோ்ந்த வே. பாரதிராஜா (31), திருப்பூா் சாமுண்டிபுரம் செல்லமாள் காலனியைச் சோ்ந்த அ.சிவபாலன் (27) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த போவீஸாா் அவா்களைக் கைது செய்து, விழுப்புரம் வேடம்பட்டிலுள்ள மாவட்டச் சிறையில் செவ்வாய்க்கிழமை காலை அடைத்தனா். மேலும் இருவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.