விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
Advertisement
இதற்கான விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.50 ஆகும். பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். மாணவா் சோ்க்கைகான கட்டணங்களை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.
எனவே மாணவ, மாணவிகள் தங்களது 10,11,12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ரத்த வகைச் சான்றிதழ், தனி நபா் வங்கிக்கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 29-ஆம் தேதி கடைசிநாளாகும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.