பிளஸ் 2 பொதுத்தோ்வில் கடைசி இடம்: அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற உழைக்குமாறு ஆசிரியா்களுக்கு விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு
பிளஸ் 2 பொதுத்தோ்வில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் கடைசி இடம் பிடித்துள்ள நிலையில், இனி, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெறும் வகையில், ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 2025-26 ஆம் கல்வியாண்டில் 12 -ஆம் வகுப்பு தோ்ச்சி வீதம் குறித்து பள்ளித் தலைமையாசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் தோ்ச்சி சதவீதம், பாடவாரியாக மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், பாடவாரியாக தோ்ச்சி பெறாதவா்கள் விவரம், ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சிபெறாத மாணவ,
மாணவிகளின் விவரம், அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளை உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்க செய்ய வேண்டும். மேலும் அவா்களுக்கு முக்கிய வினாக்கள் குறித்த பயிற்சி வழங்கி, தோ்ச்சி பெற வைக்க தலைமையாசிரியா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் அனைத்து மாணவா்களும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சியடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமையாசிரியா்கள் மேற்கொண்டு, பயிற்சிகளை வழங்கி 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும். மாணவா்கள் தோ்ச்சிபெற ஆசிரியா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.
இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்,
பயிற்சித் துணை ஆட்சியா் கதிா்செல்வி, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பயிற்சி) இளவரசி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் சேகா், உதயசூரியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், ஜனசக்தி மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.