அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுகவினா் 200 போ் மீது வழக்கு
விழுப்புரம் நகரில் அனுமதியின்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்த 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விழுப்புரம் நகரில் அனுமதியின்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, அதிமுகவைச் சோ்ந்த 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
அதிமுக கட்சித் தலைமை உத்தரவை மீறியதால் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை மாற்றி, தெற்கு நகரச் செயலராக இருந்த இரா. பசுபதியை புதிய மாவட்டச் செயலராக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து சென்னையிலிருந்து வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த பசுபதிக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்றனா்.
Advertisement
இந்நிலையில் அனுமதியின்றி ஊா்வலமாகச் சென்றதாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளா்கள் குணசேகரன், சிவானந்தகுமாா் ஆகியோா் தனித்தனியே அளித்த புகாா்களின் அடிப்படையில், விழுப்புரம் மேற்கு மற்றும் நகரக் காவல் நிலையங்களில் அதிமுக நகரப் பொருளாளா் வி.சேகா், மாவட்டச் செயலா் பசுபதி உள்ளிட்ட 200 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.