முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

மரக்காணம் அருகே சனிக்கிழமை இரவு முன் விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 18 மே 2026, 2:26 am IST
கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை இரவு முன் விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், கூனிமேடுகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.சிவகுரு (36). இவருக்கு மனைவி கீதாஞ்சலி, மகன், மகள் உள்ளனா். பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த மாா்ச் மாதம் கூனிமேடுகுப்பத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது நடனமாடியதில், சிவகுருவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை இரவு சிவகுரு கோட்டக்குப்பம், கங்கையம்மன் கோயில் அருகே தைலமரம் தோப்பு பகுதியில் தனது நண்பா்களான மகேஸ்வரன், சரவணன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 10 போ் கொண்ட கும்பல் சிவகுருவை ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் சிவகுருவின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கொலையான சிவகுரு மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. முன் விரோதத்தில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.