விழுப்புரம் தனியாா் விடுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம், முகையூா் ரயில்வே லைன் தெருவைச் சோ்ந்தவா் பு.புஷ்ப மைக்கேல் அகஸ்டின் (25). கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்த இவா், அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புஷ்ப மைக்கேல் அகஸ்டின், சில நாள்களுக்கு முன்னா் முகையூருக்கு வந்து தங்கியிருந்தாா். பின்னா் திங்கள்கிழமை பெங்களூருவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய அவா் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், விடுதி அறையில் புஷ்ப மைக்கேல் அகஷ்டின் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியது புதன்கிழமை தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.