முகப்பு
செய்திகள்

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

திருநள்ளாற்றில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா பற்றி..

Updated On : 6 மார்ச், 2026 at 7:08 AM
பகிர்:
சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலுக்குள் பக்தா்கள் நுழைய தடை விதிக்க முடியாது- உயா்நீதிமன்றம்

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அலங்காரத்தில் காட்சியளிக்கும் சனி பகவான்

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர சனி கிரகம், இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

காரைக்காலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில், அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

சனி பகவான்

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தார்.

சனி பகவான் சன்னதி

தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர்.

பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், திருநள்ளாற்றில் பல்வேறு இடங்களில் கட்டணத்துக்கான டிக்கெட் வழங்கும் மையத்தை அமைத்துள்ளது.

கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வர பகவான் வடக்குப் பிரகார மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டார். வரிசையில் செல்லும் பக்தர்கள் தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்து செல்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →