குடும்ப ஸ்தானத்தில் அசுபக் கிரகங்கள் இணைந்திருப்பது குறை. இதனால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் களத்திர ஸ்தானத்தில் உள்ள பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.