உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உங்கள் மன ஆரோக்கியம் சீரடையத் தொடங்கும். தொடர்வதும் லக்ன சுபர்களின் தசைகளாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிக்காலம் நல்லபடியாக முடியும். மேற்கூறிய காலகட்டத்திற்குள் புத்திர பாக்கியமும் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.