ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. என் மகள் இப்போது என் வீட்டில் தான் இருக்கிறாள். என் மருமகன் தங்கமான பிள்ளை. என் மகள் நாங்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது என் மருமகன் வேறு திருமணம் செய்துக் கொள்வாரோ என்று பயமாக உள்ளது. நாங்கள் போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. வயதான காலத்தில் என் மகளின் வாழ்வு மனவேதனையை அளிப்பதாக உள்ளது. கணவனுடன் சேர்ந்து வாழ்வாளா? - வாசகி, கார

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி மற்றும் குடும்பாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பது பெரிய குறை என்று கூறமுடியாது. அவருடன் ஆறு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான் இணைந்திருக்கிறார். இது லக்ன, பாக்கியாதிபதிகளின் இணைவு என்று கூறவேண்டும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அஷ்டமாதிபதியுடன் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். சுகாதிபதி மற்றும் லாபாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் சனிமகா தசையில் சுக்கிரபகவானின் புக்தி ஏப்ரல் மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் மகள் கணவருடன் இணைவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். அவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT