ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. குழந்தை பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. எப்போது கிடைக்கும்?  - வாசகர், காலடிப்பேட்டை

DIN

உங்களுக்கு கும்பலக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மனைவிக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானுடன் இணைந்திருக்கும் சனிபகவானின் தசையில் பாக்கியாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT