ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு மணவாழ்க்கை சரியாக அமையவில்லை. திருமணம் நடந்து விவாகரத்துப் பெற்றுவிட்டோம். மறுமணம் நடைபெறுமா? எம்.பி.,ஏ., படித்திருக்கும் அவருக்கு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்?  - வாசகர், வளவனூர்

DIN

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி, உச்சம் மூலதிரிகோணம் பெற்று பூர்வபுண்ணியாதிபதி மற்றும் சூரியபகவான்களுடன் இணைந்திருக்கிறார். இதனால் பத்ர யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. சுகம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய்பகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் ராகுபகவானின் தசையில் அயன ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அந்நியத்தில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். நல்ல வேலையும் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT