ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் வயிற்று பேத்திக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம். திருமணம் எப்போது நடைபெறும்? வரன் சொந்தத்தில் அமையுமா? என்ன பரிகாரம் செய்யலாம்? - வாசகர், சங்கராபுரம்

DIN

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் புதன், சூரியன், குரு, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து சச மகாயோகத்தைப் பெறுகிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று ஆறாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பத்தாம் வீட்டையும் பார்வை செய்கிறார். குருபகவானின் பார்வைபத்தாம் வீட்டின்மீதும் அங்கு அமர்ந்து இருக்கும் சனிபகவானின் மீதும் பன்னிரண்டாம் வீட்டின்மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் இரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசையில் சந்திரபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சம தோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்தில் வரன் அமைவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT