புத்தகக் காட்சியில் இன்று
(நிறைவு நாள்)
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)- 49-ஆவது ஆண்டு புத்தகக் காட்சி, நிறைவு விழா, வரவேற்பு- பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், 25 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றுபவர்- உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன், நன்றி- பபாசி செயலர் எஸ்.வயிரவன், நந்தனம், ஒய்எம்சிஏ மைதான பபாசி புத்தகக் காட்சி வளாகம், மாலை 6.
புத்தகக் காட்சியில் பிரபலங்கள்
சென்னை நந்தனத்தில் நடைபெறும் பபாசி புத்தகக் காட்சிக்கு இலங்கையிலிருந்து வெளிவரும் "தமிழன்' இதழ் முதன்மை ஆசிரியர் சிவ ராமசாமி செவ்வாய்க்கிழமை மாலை வருகை தந்தார். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனர்.