நூல் - திரைப்படம் 

மனதில் பூத்த மலர்கள்

மனதில் பூத்த மலர்கள்

DIN


மனதில் பூத்த மலர்கள்

டாக்டர் நா மகாலிங்கம், ஓம் சக்தி மாத இதழில் எழுதப்பட்டு வந்த தலையங்கங்களில் சிலவற்றைத் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை சமீபத்தில் படித்தேன்.

பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பில் நதிகள் இணைப்புக்கு தேசிய மாநாடு, அரசியல் சட்டத்திருத்தம் அவசியமே, சர்வதேச பயங்கரவாதிகளே! சத்யாகிரகிகள் ஆகுங்கள், தேசிய இலக்கியம் திருக்குறள், தமிழ்மொழியை கட்டயாமாக்க என்ன வழி?, நாடும் மொழியும், வேளாண்மை வேறு இந்தியா வேறு அல்ல, படிக்கும் போதே உழைப்பு, மேதகு அப்துல் கலாமின் 10 உறுதி மொழிகள் போன்ற கட்டுரைகளும் உள்ளடங்கியிருந்தன.

அந்நூலில் அரசியல், பொருளாதாரம், தேசியம், வேளாண்மை, நதிநீர் இணைப்பு, பள்ளிக்கல்வி முறை, தொல்காப்பியம், திருக்குறள், தமிழிசை, தமிழ் மொழி, உலகமயம், தாராளமயம் போன்ற பல தலைப்புகளில் மகாலிங்கம் உயரிய கருத்துக்களை வழங்கியுள்ளார்.

ஒரு கட்டுரையில் புத்தகத்திற்கு ஏன் நூல் என பெயர் வந்ததை, இரம்பத்தால் மரத்தை அறுக்க நூலால் கோடு போடுவார்கள். அப்படிச் செய்தால்தான் கோணலாகாமல் நேராக அறுக்க முடியும். இதே போல மனித மனம் கோணலாகாமல் நேராக இருக்க, புத்தகம் பயன்படுவதால் புத்தகத்திற்கு “நூல்” என்று பெயர் வைத்தனர் நமது பெரியோர்கள் எனக் கூறியிருந்த விளக்கம் என் மனதிற்கு மிகவும் பிடித்தது.

- வைரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT