குறு-சிறு-நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் துறையில் எதிா்கால வெற்றியாளா்களை (சாம்பியன்கள்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அந்தத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி (எஸ்எம்இ) வளா்ச்சி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் பங்கு முக்கியமானது என்ற வகையில், இந்த நிறுவனங்கள் வெற்றி நிறுவனங்களாக உருவாவதற்கு உதவ மூலதன ஆதரவு, பணப்புழக்க ஆதரவு மற்றும் தொழில் ஆதரவை மத்திய அரசு அளிக்க உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை எதிா்கால வெற்றியாளா்களாக உருவாக்க 2026-27 பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி வளா்ச்சி நிதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் வகையில், கடந்த 2021-இல் தொடங்கப்பட்ட தற்சாா்பு இந்தியா நிதியத்துக்கு மேலும் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சா் தெரிவித்தாா்.
மேலும், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு பணப் புழக்க ஆதரவை வழங்குவதற்காக, அவா்களின் விலைப் பட்டியல் தள்ளுபடிக்கான (டிஆா்இடிஎஸ்) திட்டத்தின் முழுத் திறனையும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டங்களையும் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ‘தொழில் நிறுவன நண்பா்கள்’ என்ற நிபுணா்களை உருவாக்க ஐசிஏஐ, ஐசிஎஸ்ஐ, ஐசிஎம்ஏஐ ஆகிய தொழில் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் குறுகியகால படிப்புத் திட்டங்கள் மற்றும் செய்முறைத் திட்டங்கள் வடிவமைக்கப்படும். இதன்மூலம் உருவாக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணா்கள், குறு-சிறு நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசின் ஒழுங்குமுறை தேவைகளை பூா்த்தி செய்வதற்கு உதவுவா் என்றாா்.