வர்த்தகம்

நாட்டின் மொத்த பணவீக்கம் 1.88 சதவீதம் அதிகரிப்பு

DIN

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக சில பொருள்களின் விலை உயர்ந்ததையடுத்து பணவீக்க விகிதம் சென்ற ஜூலை மாதத்தில் 1.88 சதவீதமாக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம் சென்ற ஜூலையில் 1.88 சதவீதமாக அதிகரித்தது. ஜூன் மாதத்தில் இது 0.90 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூலையில் 0.63 சதவீதமாகவும் காணப்பட்டது. அவற்றுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு ஜூலையில் பணவீக்க விகிதம் கணிசமாக அதிகரித்தது.
சென்ற ஜூலையில் உணவுப் பொருள்களின் விலை 2.15 சதவீதம் அதிகரித்தது. ஜூனில் அவற்றின் விலை 3.47 சதவீதம் குறைந்திருந்தது. அதேபோன்று, ஜூனில் காய்கறிகளின் விலை 21.16 சதவீதம் குறைந்திருந்த நிலையில், ஜூலையில் அவற்றுக்கான விலை 21.95 சதவீதம் அதிகரித்தது. தயாரிப்புத் துறை பொருள்களுக்கான பணவீக்கம் 2.27 சதவீதத்திலிருந்து குறைந்து 2.18 சதவீதமாக காணப்பட்டது. மேலும், மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றுக்கான பணவீக்கம் 5.28 சதவீதத்திலிருந்து குறைந்து 4.37 சதவீதமாக இருந்தது.
மே மாதத்துக்கான பணவீக்கம் இறுதி மதிப்பீட்டில் 2.26 சதவீதமாக அதிகரித்தது. தாற்காலிக மதிப்பீட்டில் இது 2.17 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில்லறை பணவீக்கம் 2.36% அதிகரிப்பு

சென்ற ஜூலை மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 2.36 சதவீதமாக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை விலை பணவீக்கம் சென்ற ஜூலையில் 2.36 சதவீதமாக அதிகரித்தது. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் (-) 2.12 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில் (-) 0.29 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், சர்க்கரை மற்றும் அது சார்ந்த பொருள்களின் விலை 8.27 சதவீதம் அதிகரித்தது. ஆடைகள், காலணிகளின் சில்லறை விற்பனை விலை 4.22 சதவீதம் அதிகரித்தது.
கிராமப்புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 2.17 சதவீதத்திலிருந்து அதிகரித்து 2.41 சதவீதமாகவும், நகரங்களில் சில்லறை விலை பணவீக்கம் 1.41 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.52 சதவீதமாகவும் இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT