வர்த்தகம்

பங்குச் சந்தை சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிவு

DIN

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
ஆசியச் சந்தையில் நிலவி வரும் மந்த நிலை, அமெரிக்க - சீன வர்த்தகப் போர் விவகாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததும், பங்குச் சந்தையை மந்தமடையச் செய்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கள்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் மும்முரம் காட்டியதால், மிகவும் குறைந்தபட்சமாக 34,811 புள்ளிகள் வரை தாழ்ந்த சென்செக்ஸ், இறுதியில் 34,950 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 61 புள்ளிகள் (0.17%) சரிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT