மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: நிலக்கரி துறையின் செயலராக இருந்த ஜித் சிங்கிற்கு புதிய பணி கொடுக்கப்படவிருப்பதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்தது.
இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு சுமந்தா சௌத்ரியை நியமிப்பதாக கேபினட் நியமனக் குழு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமந்தா சௌத்ரி கடந்த 1985-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வானவர்.இவர் இப்பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, சிறிய விவசாயிகளுக்கான வேளாண்-வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.