வர்த்தகம்

நிலக்கரி துறை செயலராக சுமந்தா சௌத்ரி பொறுப்பேற்பு

DIN


மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி  செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: நிலக்கரி துறையின் செயலராக இருந்த ஜித் சிங்கிற்கு புதிய பணி கொடுக்கப்படவிருப்பதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்தது. 
இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு சுமந்தா சௌத்ரியை நியமிப்பதாக கேபினட் நியமனக் குழு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமந்தா சௌத்ரி கடந்த 1985-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வானவர்.இவர் இப்பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, சிறிய விவசாயிகளுக்கான வேளாண்-வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT