வர்த்தகம்

பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிகர லாபம் 22 சதவீதம் அதிகரிப்பு

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) முதல் காலாண்டு லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பிஎஃப்சி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.7,027.50 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,728.60 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிகர லாபம் ரூ.1,122.43 கோடியிலிருந்து 22 சதவீதம் உயர்ந்து ரூ.1,373.26 கோடியாக காணப்பட்டது என பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் மின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT