வர்த்தகம்

ரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் நான்கு மடங்கு அதிகரிப்பு

DIN


அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,083 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.4,641 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். வருமானம் கணிசமாக அதிகரித்ததையடுத்து ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.295 கோடியிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து ரூ.1,218 கோடியானது.
நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் கேப்பிட்டலின் சொத்து மதிப்பு ரூ.79,207 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.83,973 கோடியாக காணப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து நிரந்தர டொபசிட் எதையும் திரட்டவில்லை என அந்த அறிக்கையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT