வர்த்தகம்

42 சதவீதம் உயரும் பார்தி ஏர்டெல் கட்டணம்!

DIN


பார்தி ஏர்டெல் நிறுவனம் 42 சதவீதம் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

கடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. இருப்பினும், கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மொபைல் பயனாளர்களுக்கான புதிய கட்டண உயர்வை வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்று அறிவித்தது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது என வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, மொபைல் பயனாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை பார்தி ஏர்டெல் நிறுவனமும் இன்று வெளியிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களைவிட புதிய கட்டணம் 42 சதவீதம் அதிகம் என்றும், வரும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் பயனாளர்கள் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 49 கட்டணமாக செலுத்த வேண்டும். 

முன்னதாக, வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 50,921 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. இதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இரண்டாம் காலாண்டில் ரூ. 23,045 கோடி இழப்பை சந்தித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT