வர்த்தகம்

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 119 கோடி

DIN


தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2018 அக்டோபர் மாத நிலவரப்படி 119.2 கோடியாக அதிகரித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபர் நிலவரப்படி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 119.2 கோடியாக உள்ளது.
கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 1.08 கோடி செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. அதேசமயம், இதர தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை 1.01 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
அக்டோபரில் தனி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 1 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. பிஎஸ்என்எல் 3.66 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT