வர்த்தகம்

மாருதியின் புதிய வேகன்ஆர் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்

DIN


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
மூன்றாம் தலைமுறைக்கான வேகன்ஆர் புதிய பதிப்பு ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இக்காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் பிக் நியூ வேகன்ஆர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றொரு மாடலில் 1 லிட்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. 
இவற்றில் ஆட்டோமேட்டிக் கியர் வசதியும் உள்ளது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT