வர்த்தகம்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் கடன்பத்திர வெளியீடு ஜூலை 17-இல் தொடக்கம்

DIN


வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திர வெளியீடு ஜூலை 17-இல் தொடங்கவுள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் ரூ.300 கோடிக்கு பங்குகளாக மாற்ற இயலாத  கடன்பத்திரங்களை வெளியிடவுள்ளது. அதற்கான வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் ரூ.10,000 கோடி வரை திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன்பத்திரங்களின் முதிர்வு காலம், 30, 42, 60 மற்றும் 84 மாதங்களாக இருக்கும். கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 9.12 சதவீதம் முதல் 9.70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் புதன்கிழமை (ஜூலை 17) தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் முடிவடையும். தேவையேற்படின் இந்த வெளியீட்டுக் காலத்தை முன்னதாகவே முடிக்கவோ அல்லது நீட்டித்துக் கொள்ளவோ திட்டமிடப்பட்டுள்ளது. 
இக்கடன்பத்திரங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
திரட்டப்படும் இந்த தொகை, கடன் வழங்குதல், வட்டி திருப்பிச் செலுத்துதல், ஏற்கெனவே உள்ள கடன்களின் அசல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT