வர்த்தகம்

டிவி விற்பனையில் 34% சந்தை பங்களிப்பு: சாம்சங் இலக்கு

DIN


சாம்சங் இந்தியா நிறுவனம் டிவி விற்பனையில் அதன் பங்களிப்பை 34 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜு புல்லான் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
 சந்தையில் கியூஎல்இடி டிவிக்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இதையடுத்து,  நடப்பாண்டில் அதன் விற்பனை மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, சாம்சங் பெரிய திரை பிரிவில் மூன்று கியூஎல்இடி 8கே டிவிக்களை, ரூ.10.99 லட்சம் (75 அங்குலம்) மற்றும் ரூ.16.99 லட்சம் (82 அங்குலம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, 98 அங்குல திரை கொண்ட கியூஎல்இடி 8கே டிவிக்களை நிறுவனம் முன்கூட்டிய ஆர்டர்களின் பேரில் தயாரித்து வருகிறது.
65 அங்குல திரையுடைய டிவியின் விலை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 
இவைதவிர, 12 கியூஎல்இடி 4கே டிவிக்களை சாம்சங் அண்மையில்தான் அறிமுகப்படுத்தியது.
தற்போதைய நிலையில், டிவி சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பு 30 சதவீத அளவுக்கே உள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற புதிய அறிமுகங்களின் உதவியால், வரும் அக்டோபர்-நவம்பர் பண்டிகை காலங்களில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை 34 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT