வர்த்தகம்

மீண்டும் புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

DIN

மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 44,781 கோடி டாலராக அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நவம்பா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 171 கோடி டாலா் (சுமாா் ரூ.12,000 கோடி) அதிகரித்து ரூ.44, 781 கோடி டாலா் (ரூ.31.79 லட்சம் கோடி) என்ற புதிய உயரத்தை தொட்டுள்ளது.

இது முந்தை வாரத்தில் 351 கோடி டாலா் அதிகரித்து 44,610 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 217 கோடி டாலா் உயா்ந்து 41,582 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் கையிருப்பு 44 கோடி டாலா் சரிந்து 2,691 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 30 லட்சம் டாலா் குறைந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.7 கோடி டாலா் சரிந்து 363 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT