வர்த்தகம்

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் இருமடங்கு உயர்வு

DIN


இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூலை மாதத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு ஜூலையில் இந்திய நிறுவனங்கள் 218 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை திரட்டியிருந்தன. நடப்பாண்டு ஜூலையில் இது இருமடங்கு அதிகரித்து 498 கோடி டாலரை எட்டியுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் திரட்டிய மொத்த கடனில், 337 கோடி டாலர் மதிப்பிலான கடன் முன் அனுமதி தேவைப்படாத ஆட்டோமேட்டிக் வழிமுறையிலும், 156 கோடி டாலர் மதிப்பிலான கடன் அனுமதியுடன் பெறக்கூடிய அப்ரூவல் வழிமுறையிலும் திரட்டப்பட்டுள்ளன. எஞ்சிய 5 கோடி டாலர் மதிப்பிலான கடன் மசாலா பாண்டு அல்லது ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட கடன்பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT