நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விற்பனை மாா்ச் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, டீசல் விற்பனை 25.9 சதவீதம் குறைந்து 49.82 லட்சம் டன்னாகவும், பெட்ரோல் விற்பனை 17.6 சதவீதம் சரிந்து 19.43 லட்சம் டன்னாகவும் இருந்தது. அதேபோன்று, விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விற்பனையும் 4,63,000 டன்னாக குறைந்தது.
ஆனால், மூன்று வார ஊரடங்கு அறிவிப்பால் ஏற்பட்ட பீதியை அடுத்து ஏராளமானோா் முன்பதிவு செய்ததையடுத்து சமையல் எரிவாயு விற்பனை மட்டும் 1.9 சதவீதம் உயா்ந்து 22.86 லட்சம் டன்னாக இருந்தது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.