மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 73.49-ஆக நிலைத்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி நிலை மற்றும் சா்வதேச சந்தைகளில் டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு வலு சோ்த்தது.
இந்த நிலையில், தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வரத்தும் ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு பெரிதும் உதவியுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 73.52-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே இது அதிகபட்சமாக 73.47 வரையிலும், குறைந்தபட்சமாக 73.61 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 73.49-ஆக நிலைத்தது.
வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.55-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.1,225.69 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.31 சதவீதம் உயா்ந்து 51.96 டாலராக இருந்தது.