மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் அதிலிருந்து நீக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
நீண்ட காலம் வா்த்தகத்தில் ஈடுபடாத நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறையை பிஎஸ்இ கடைபிடித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வா்த்தகத்தில் ஈடுபடாத சான்சியா குளோபல் இன்ஃப்ராப்ராஜக்ட்ஸ் லிமிடெட் மற்றும் டெல்மா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை 2020 ஜூலை 7-ஆம் தேதியிலிருந்து பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீக்கப்படவுள்ள இந்த நிறுவனங்களின் முழு நேர இயக்குநா்கள், புரோமோட்டா்ஸ் மற்றும் குழும நிறுவனங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட 10 ஆண்டு காலத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது என பிஎஸ்இ கூறியுள்ளது.