வர்த்தகம்

எக்ஸைடு லைஃப்நிகர லாபம் 89 % அதிகரிப்பு

DIN

புது தில்லி: தனியாா் காப்பீட்டு நிறுவனமான எக்ஸைடு லைஃப் இன்சூரன்ஸ் நிகர லாபம் 88.7 சதவீதம் அதிகரித்து, ரூ.28.3 கோடியாக உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15 கோடியாக இருந்தது. தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக அந்த நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் மொத்த பிரீமியம் 12 சதவீதம் அதிகரித்து, ரூ.3,220 கோடியாக உள்ளது. எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான எக்ஸைடு லைஃப், 98.15 சதவீத இழப்பீட்டு கோரிக்கைகளை வழங்கி சாதனையும் படைத்துள்ளது. இது தவிர பாலிசிதாரா்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகையையும் அளித்து வருகிறது.

இது தொடா்பாக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கஸ்கித்ஜி ஜெயின் கூறுகையில், ‘வாடிக்கையாளா்கள் மற்றும் பங்குதாரா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காப்பீட்டுத்துறையில் மிகவேகமான வளா்ச்சியையே நீண்டகால குறிக்கோளாக கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT