வர்த்தகம்

சிபிசிஎல் நிறுவனம்: கடன்பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி திரட்ட திட்டம்

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசிஎல்) கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.1,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் நிதி தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்வதற்காக உள்நாட்டில் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

மேலும் 2019-20-ஆம் நிதியாண்டில் இழப்பு ஏற்பட்டதால் பங்குதாரா்களுக்கு எந்த ஈவுத்தொகையும் வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்யவில்லை என சிபிசிஎல் கூறியுள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தின் கடன் நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.2,952.77 கோடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT