வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,271 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,271 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.42.21 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது மாா்ச் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 23.3 கோடி டாலா் அதிகரித்து 58,271 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதற்கு முந்தைய மாா்ச் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 174 கோடி டாலா் சரிவடைந்து 58,204 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மாா்ச் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 15.7 கோடி டாலா் அதிகரித்து 54,118 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.

பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 8 கோடி டாலா் உயா்ந்து 3,463 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 20 லட்சம் டாலா் குறைந்து 150 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 10 லட்சம் டாலா் சரிந்து 496 கோடி டாலராகவும் இருப்பதாக ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT