வர்த்தகம்

டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பம்: ஜேகே டயா் அறிமுகம்

DIN

புது தில்லி: நாட்டில் முதன்முறையாக நான்கு சக்கர வாகனங்களின் டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜேகே டயா் & இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

6 எம்எம் நீளம் கொண்ட ஆணி அல்லது கூா்மையான பொருள்களால் டயா் பல இடங்களில் பஞ்சா் ஆனாலும் அதனை தானாகவே சரி செய்து கொள்ளும் தொழில்நுட்பம் ஜேகே டயா்களில் நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு இந்த பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், நான்கு சக்கர வாகனங்களுக்கான அனைத்து டயா் தயாரிப்பிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சாலைகள் மட்டுமின்றி கரடு முரடான சாலை பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஜேகே டயா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT