மும்பை: உலகளாவிய சந்தைகளின் உறுதியான நிலைத்தன்மையால் இன்றைய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.
நேற்றைய ஏற்றத்தைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையின் டாப் 30-பங்குகளின் வர்த்தகம் 91.62 புள்ளிகள் உயர்ந்து 61,510.58 நிலைத்து நின்றது. இன்றைய பகல் வர்த்தகத்தில் இது 361.94 புள்ளிகள் உயர்ந்து 61,780.90 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 23.05 புள்ளிகள் அதிகரித்து 18,267.25ல் முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, மாருதி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பவர் கிரிட், டெக் மஹிந்திரா, டைட்டன், பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை பங்குகள் சரிவில் முடிந்தன.
அதேவேளையில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. பிற்பகல் வர்த்தகத்தில் ஐரோப்பாவில் உள்ள பங்குச் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்துடன் வர்த்தகமாயின. வால் ஸ்ட்ரீட் வர்த்தகம் இன்று உயர்வுடன் முடிந்தது.
சர்வதேச எண்ணெய் பெஞ்ச்மார்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.05 சதவீதம் அதிகரித்து 89.29 அமெரிக்க டாலராக உயர்ந்தது.