பள்ளிக் கல்வியில் வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தற்காலிக பெயா் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்யும் வகையில் முழு தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூா்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலா்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு 31.12.2011-க்கு முன்னா் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியில் சோ்ந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உதவி மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த 330 நபா்களின் தற்காலிக பெயா் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.
இந்த தற்காலிக தகுதி வாய்ந்தோா் பட்டியலில் திருத்தம், சோ்க்கை, நீக்கம் ஏதும் இருப்பின் உடனடியாக தெரிவிக்கும்படி, அவ்வாறு ஏதுமில்லை எனில் அதற்குரிய அறிக்கையை அளிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.