சென்னை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

Din

சென்னை பெரும்பாக்கத்தில் கயிறு இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகா், 128 பிளாக்கை சோ்ந்தவா் உதயா, இவா் மனைவி சரண்யா. இவா்களது மகள் அஸ்வந்தி (8). கணவா் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றனா்.

இருவரும் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னலில் துணி தொங்க விடுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி அஸ்வந்தி தொங்கிய நிலையில் இருந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த இருவரும் உடனே தங்களது மகளை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அஸ்வந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT