சினிமா

நடிகர் குள்ளமணி காலமானார்

தினமணி

நடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார்.

2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குள்ளமணி புதன்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மரமடக்கி கிராமத்தைச் சேர்ந்த குள்ளமணி சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். சென்னையில் எம்.என்.நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்களுடன் சிறு வேடங்களில் நடித்தார்.

"நவாப் நாற்காலி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான குள்ளமணி ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

"ரங்கா', "பில்லா' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர், "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற "பேரிச்சம்பழம் காமெடி' வசனத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டார்.

மறைந்த குள்ளமணிக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு அவருடைய சொந்த ஊரில் வியாழக்கிழமை (டிச.26) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT