"டாணா'வில் போலீஸாக சிவகார்த்திகேயன்
எதிர்நீச்சல் படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அந்த படத்தின் கூடடணி மீண்டும் இணைகிறது. சிவகார்த்திகேயன், இயக்குநர் துரை செந்தில் குமார், அனிரூத், என அனைவரும் கூட்டணியில் டாணா
எதிர்நீச்சல் படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அந்த படத்தின் கூடடணி மீண்டும் இணைகிறது. சிவகார்த்திகேயன், இயக்குநர் துரை செந்தில் குமார், அனிரூத், என அனைவரும் கூட்டணியில் டாணா திரைப்படம் உருவாகிறது.
எதிர்நீச்சல் படத்தை தயாரித்த நடிகர் தனுஷ், டாணாவையும் தயாரிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார் இணைகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் 9 ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.
டாணா படத்தில் சிவகாரத்திகேயன் போலீஸாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாணா என்பது வெள்ளையர் காலத்தில் போலீஸ் என்று அர்த்தமாம். போலீஸ்காரர்களை டாணா என்று தான் அழைப்பார்களாம். டானாவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.