பாகுபலி படம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்!
தெலுங்கு சினிமாவின் பெருமையை ராஜமெளலி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாகுபலி படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று வெளியான பாகுபலி படம் உலகம் முழுக்க பலத்த பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. முதல்முறையாக ஒரு தெலுங்குப் படம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இதை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பாகுபலி குழுவுக்குத் தன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
ராஜமெளலி மற்றும் அவரது குழுவினருக்கு பாகுபலி போன்ற ஒரு மாஸ்டர்பீசை உருவாக்கியதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு சினிமாவின் பெருமையை ராஜமெளலி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Advertisement