மணி ரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் கீர்த்தனா!
அவர் தற்போது ஆடிஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்...
இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் பார்த்திபனின் மகள் ஆர்.எஸ். கீர்த்தனா.
மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தில் கீர்த்தனா உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் தற்போது ஆடிஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
கீர்த்தனா, 2002-ல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
Advertisement