திருமண உறவு முறிந்தது: விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா அறிவிப்பு
இது என் தனிப்பட்ட விவகாரம். இதனை ஊடகங்களும், நண்பர்களும் மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
விஜய் டிவி தொகுப்பாளரான ரம்யா, தன் திருமண உறவை முறித்துக்கொண்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
ரம்யா, லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த அப்ரஜீத்தை சென்ற வருடம் பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு ரம்யா, கணவரைப் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ரம்யா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இப்போது முதல்முறையாக தனது திருமண முறிவு குறித்து தகவல் தெரிவித்துள்ளார் ரம்யா. நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஆமாம். பரஸ்பர சம்மதத்துடன் என்னுடைய திருமண உறவை முறித்துக்கொண்டுள்ளேன். என் நண்பர்களுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள் - இது என் தனிப்பட்ட விவகாரம். இதனை ஊடகங்களும், நண்பர்களும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். இப்போது என் கவனம் எல்லாம் வேலையில் மட்டும்தான். அதற்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement