பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி.க்களான ராகவ் சாத்தா உள்பட 3 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி.க்களான ராகவ் சாத்தா உள்பட 3 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர்.
தலைநகர் தில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் இணைந்த ராகவ் சாத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகிய 3 பேருக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்பு ஊட்டியும் வரவேற்றார்.
அவர்களைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்ட மேலும் 4 ஆம் ஆத்மி எம்.பி.க்களும் பாஜகவில் விரைவில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
முன்னதாக, இன்று தில்லியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சாத்தாவும், சந்தீப் பதக்கும் தாங்கள் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்சியை விட்டு விலகி, ஒரு தனிப் பிரிவாக பாஜகவில் இணைவார்கள் என்றும் சாத்தா கூறினார்.
கட்சியை விட்டு விலகிய ஏழு பேரில் சுவாதி மாலிவாலும், ஹர்பஜன் சிங்கும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.