FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் - நடிகர் விஜய் அறிவுறுத்தல்!

வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 

Updated On : 15 செப்டம்பர் 2019, 1:19 pm IST
பகிர்:

வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.  

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் தனது இரங்கலையும், பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விஜயின் 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகியப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.

2019 தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதர பாடல்கள் வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் ரிலீஸாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments