தலைவா....: ரஜினியைச் சந்தித்த டப்பிங் கலைஞர் ரவீணா! (படங்கள்)
டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீணா, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்...
டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீணா, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: தலைவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். எந்திரன் 2, 2.0 பற்றி எதுவும் பேசவில்லை. குரல் பரிசோதனைக்காகவும் செல்லவில்லை. இது ஒரு ரசிகையின் சந்திப்புதான். என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது. தலைவா... அவர் மிகவும் இயல்பாகப் பேசினார். உலகம் முழுக்க அவரைக் கொண்டாடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்று கூறியுள்ளார்.
முன்னணி நடிகைகள் பலருக்குக் குரல் கொடுத்துள்ள ரவீணா, ஒரு கிடாயின் கருணை மனு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.